நமது திருமண சம்பிரதாயங்களில் மிக முக்கியமானது மெட்டி மாட்டுவது. முன்பு மெட்டி மாட்டுவது என்பது ஆண்களுக்கு மத்தியிலும் இருந்தது. காலப்போக்கில் ஆண்கள் மெட்டி மாட்டுவது மறைந்துவிட்டது.

மெட்டி என்பதை நமது முன்னோர்கள் வெறும் சடங்காக மட்டும் வைத்துவிடவில்லை. மெட்டி அணிவது திருமணமான பெண் என்பதன் அடையாளத்தையும் தாண்டி சில அறிவியல் காரணமும் இருக்கின்றன.

பொதுவாக மெட்டி 2-வது விரலில் தான் அணிவார்கள். அந்த 2-வது விரலில் இருந்து ஒரு நரம்பு கருப்பை மூலமாக இதயத்திற்கு செல்கின்றது. இந்த விரலில் மெட்டி அணிவதால் கருப்பை பலமாகிறது மற்றும் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

இதனால் பெண்கள் கர்ப்ப காலத்தின் போது எந்த பிரச்சனையும் இருக்காது என்று கூறப்படுகிறது. மேலும் வெள்ளி மெட்டி பூமியின் துருவ ஆற்றல்களை ஈர்த்து உடம்பிற்குள் செலுத்துகின்றது என்று கூறப்படுகிறது. இவ்வளவு நல்ல விஷயங்கள் இருப்பதால் தான் பெண்களுக்கு திருமணத்தின் போது மெட்டி அணிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here