மது போதையில் பேருந்து செலுத்தியதாக கூறப்படும் சாரதி ஒருவர் நுவரெலியா கந்தப்பளை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

உடபுஸ்சல்லாவையிலிருந்து, நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை செலுத்திய சாரதியே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சாரதியை கைது செய்யும் போது, அவர் செலுத்திச்சென்ற பேருந்தில் சுமார் 30 பேர் பயணித்ததாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

உடபுஸ்சல்லாவை பகுதியை சேர்ந்த 55 வயதான சாரதி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலத்தை பதிவு செய்ததன் பின்னர் அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

அத்துடன், சாரதிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here