ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.1 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து விளையாடிய இந்திய அணி 19.4 ஓவரில் 150 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னதாக இந்திய அணி பேட்டிங் செய்த போது சஞ்சு சாம்சன் விக்கெட்டை சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமது வீழ்த்தினார். அப்போது அப்ரார் தனது பாணியில் அதனை கொண்டாடினார்.

இதனையடுத்து போட்டி முடிந்த பிறகு சஞ்சு சாம்சனை சக வீரர்களான அர்ஷ்தீப் சிங், ஜித்தேஷ் சர்மா, ரானா ஆகியோர் அப்ரார் ஸ்டைலில் கலாய்த்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here