சீனிமோதர போதைப்பொருள் தொகை தொடர்பில் மற்றுமொருவர் கைது

தங்காலை சீனிமோதர பகுதியில் மூன்று லொறிகளில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய மற்றொரு நபர், தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

“பெலியத்தே சனா” என்ற இக்குற்றவாளி நேற்று (01.10.2025) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து இந்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு, போக்குவரத்துக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 700 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள், தங்காலை சீனி மோதர பகுதியில் சமீபத்தில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டன.

“உனாகுருவே சாந்த” என்ற வெளிநாட்டு போதைப்பொருள் கடத்தல்காரருக்கு சொந்தமானதாகக் கூறப்படும் இந்த போதைப்பொருள் தொகையை இந்நாட்டில் விற்பனைக்காக கொண்டு வந்த சந்தேக நபர்களைக் கைது செய்ய, பொலிஸார் விசேட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்.

அதன்படி, இக்கடத்தலில் ஈடுபட்ட “பெலியத்தே சனா” என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர், இக்கடத்தலில் முக்கிய சந்தேக நபரான “பூமிதெலா”வின் நெருங்கிய கூட்டாளி எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கூடுதலாக, கடத்தல்காரர்கள் போதைப்பொருட்களை மறைத்து வைத்திருப்பதாகக் கூறப்படும் மற்றொரு வீட்டையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

தங்காலை மாரகொலனிய பகுதியில் அமைந்துள்ள இந்த வீட்டை, கடத்தல்காரர்கள் போதைப்பொருட்களை மறைக்க பயன்படுத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, நாட்டில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட அனைத்து குற்றங்களையும் விரைவாக முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

ஹட்டன் தொழிலாளர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles