மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவரில் 326 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. அந்த அணியின் ஆஷ்லீ கார்ட்னர் அதிரடியாக ஆடி 83 பந்துகளில் ஒரு சிக்சர், 13 பவுண்டரி உள்பட 115 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

நியூசிலாந்து சார்பில் ஜெஸ் கெர், லியா தகுகு ஆகியோர் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

இதையடுத்து 327 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. கேப்டன் சோபி டிவைன் தனி ஆளாகப் போராடி சதமடித்து 112 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்ற வீராங்கனைகள் நிலைத்து நிற்கவில்லை.

இறுதியில், நியூசிலாந்து அணி 43.2 ஓவரில் 237 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here