இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி. இருவரும் 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டனர். ஒருநாள் ஆட்டத்தில் மட்டுமே விளையாட உள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வருகிற 19- ந் தேதி தொடங்கும் 3 போட்டிக்கொண்ட ஒரு நாள் தொடரில் ரோகித் சர்மாவும், விராட் கோலியியும் தேர்வு பெற்றுள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் சர்வதேச போட்டியில் ஆட இருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்திய அணிக்காக நம்பமுடியாத விஷயங்களை ரோகித் சர்மா செய்துள்ளார் என நியூசிலாந்து அணி வீரர் கனே வில்லியம்சன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

ரோகித் சர்மா விளையாட்டின் ஜாம்பவான். அவர் இந்திய கிரிக்கெட்டுக்காக நம்பமுடியாத விஷயங்களைச் செய்துள்ளார். மேலும் அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு மிகவும் உதவியாக இருப்பார்.

என வில்லியம்சன் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here