பிரதமர் ஹரிணி அமரசூரிய உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை (16) இந்தியாவிற்கு பயணமாகவுள்ளார்.

குறித்த விஜயத்தின் போது, ​​பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உயர் மட்டக் குழுவினருடன் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

அத்துடன் ஒக்டோபர் 17 ஆம் திதகி NDTV மற்றும் சிந்தன் ஆராய்ச்சி அறக்கட்டளை ஏற்பாடு செய்யும் NDTV உலக உச்சி மாநாட்டில், “நிச்சயமற்ற காலங்களில் ஏற்படும் மாற்றங்களை வழிநடத்துதல்” என்ற தலைப்பில் பிரதமர் சிறப்புரையாற்றவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here