ஆஸ்திரேலியாவில் மீண்டும் விளையாடுவேனா?: ரோகித் சர்மா பதில்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா அபாரவெற்றி பெற்றது.

இந்நிலையில், போட்டி முடிந்தபின் இந்திய அணியின் சீனியர் வீரர் ரோகித் சர்மா பேசியதாவது:

எனக்கு எப்போதுமே ஆஸ்திரேலியாவில் விளையாடுவது பிடிக்கும்.

இங்கு 2008-ம் ஆண்டு நான் முதல் முறையாக வந்து விளையாடிய இனிமையான நினைவுகள் உள்ளன.

நானும் விராட் கோலியும் மீண்டும் ஆஸ்திரேலியா வந்து விளையாடுவோமா என்பது எங்களுக்கு தெரியாது.

என்ன சாதனைகள் படைத்தாலும், பாராட்டுகளைப் பெற்றாலும் எங்கள் கிரிக்கெட்டை ரசித்து விளையாடுகிறோம்.

இந்த தொடருக்காக பெர்த் வந்தபோது கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பதை மறந்துவிட்டு புதிதாக தொடங்கினோம்.

ஆஸ்திரேலியாவில் கடினமான ஆடுகளத்தையும், தரமான பந்து வீச்சையும் எதிர்பார்க்கலாம். இங்கு விளையாடுவது ஒருபோதும் எளிதானது கிடையாது.

நாங்கள் தொடரை வெல்லவில்லை. ஆனால் நேர்மறையான விஷயங்கள் அதிகம் கிடைத்துள்ளன. இது ஒரு இளம் அணி. எனவே அதிகம் கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கும்.

நான் இந்திய அணிக்குள் வந்தபோது சீனியர் வீரர்கள் அதிகம் உதவினார்கள். தற்போது அந்தப் பணியை நாங்கள் செய்கிறோம்.

இளம் வீரர்களை வழிநடத்த வேண்டும். ஆட்ட திட்டங்களை உருவாக்க வேண்டும். அடிப்படையான விஷயங்களைச் செய்ய வேண்டும். நான் இங்கு விளையாடும் ஒவ்வொரு முறையும் அதனை தான் செய்கிறேன் என தெரிவித்தார்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles