Monday, February 2, 2026
HomeMain NewsMiddle Eastரஷியப் படைகளுக்கு விநியோகம் செய்யும் முக்கிய எரிபொருள் பைப்லைனை தாக்கி அழித்தது உக்ரைன்

ரஷியப் படைகளுக்கு விநியோகம் செய்யும் முக்கிய எரிபொருள் பைப்லைனை தாக்கி அழித்தது உக்ரைன்

ரஷியாவின் தலைநகர் மாஸ்கோ பிராந்தியத்தில் உள்ள, முக்கிய எரிபொருள் பைப்லைனை தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் தொடர்ந்து எரிபொருள் கட்டமைப்புகள் மீது ரஷியா தாக்குதல் நடத்திய நிலையில், இந்த தாக்குதலை உக்ரைன் நடத்தியுள்ளது.

மாஸ்கோ மற்றும் நிஸ்னி நோவ்கொரோடுவில் உள்ள ரியாசான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து 400 கி.மீ. நீளம் கொண்ட கோல்ட்செவோய் பைப்லைன்கள் மூலம் விமான எரிபொருள், டீசல், பெட்ரோல் ஆகியவை ரஷிய படைகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த எரிபொருள் பைப்லைன்களை தாக்கி அழித்ததாக உக்ரைன தெரிவித்துள்ளது. இது ரஷியப் படைகளுக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை நள்ளிரவு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் உள்ள எரிபொருள் கட்டமைப்புகள் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதற்கு பதிலடியாக உக்ரைன் இந்த தாக்குதலை நடத்தியுளுள்து.

ராமென்ஸ்கி மாவட்டம் அருகே உள்ள கட்டமைப்பை இலக்காக நிர்ணயித்து மூன்று எரிபொருள் லைன்களையும் தாக்கி அழித்ததாக தெரிவித்துள்ளது. இந்த எரிபொருள் பைப் லைன்கள் 3 மில்லியன் டன் வரை விமான எரிபொருள், 2.8 மில்லியன் டன் வரை டீசல், 1.6 மில்லியன் டன் வரை பெட்ரோல் எடுத்துச் செல்லும் திறன் கொண்டது.

இன்று காலை ரஷியா, தென் உக்ரைன் பகுதியில் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 15-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். மத்திய போல்டாவா பிராந்தியில் உள்ள கியாஸ் நிலையம் மீதும் ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular