பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் ஆயிரக்கணக்கானோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் என்று கூறப்படுகிறது

அமெரிக்காவில், இந்தியாவின் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் லாரி டிரைவர்களாக பணியாற்றி வருகின்றனர். இதற்கிடையில், சமீபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு லாரி டிரைவர் விபத்து ஒன்றை ஏற்படுத்தினார். இதையடுத்து, வெளிநாடுகளைச் சேர்ந்த லாரி டிரைவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வியடைந்த 7,000-க்கும் மேற்பட்ட லாரி டிரைவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று அமெரிக்க போக்குவரத்துச் செயலாளர் சீன் டபி தெரிவித்தார்.பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் ஆயிரக்கணக்கானோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் என்று கூறப்படுகிறது.

இவர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப் மற்றும் அரியானாவைச் சேர்ந்தவர்கள். இந்த நடவடிக்கை, அமெரிக்காவில் இந்திய வம்சாவளி லாரி டிரைவர்களை மிகவும் கடுமையாக பாதித்துள்ளது. அமெரிக்க லாரி தொழிலில் லட்சக்கணக்கான சீக்கியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் 90 சதவீதம் பேர் டிரைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here