இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (04) புது டெல்லியில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார்.
இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை வளர்ப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையில் இயற்கை வளங்களை திறம்பட பயன்படுத்துதல் மற்றும் மனித திறன் மேம்பாடு, இந்தியாவின் மாறிவரும் பொருளாதாரத்துடன் இலங்கையை எவ்வாறு நெருக்கமாக இணைப்பது மற்றும் அதற்கானபலத்தை உருவாக்குவது குறித்து இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இலங்கை மக்களுக்கு நெருக்கடியான காலங்களிலும், வளர்ச்சிப் பயணத்திலும் இந்தியா தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.

















