கனமழையுடனான காலநிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இரணைமடுக்குளத்தின் 6 வான் கதவுகள் நேற்று திறக்கப்பட்டன.
இரணைமடுக்குளத்தின் நீரேந்து பகுதிகளுக்கு கிடைக்கப்பெற்ற மழைவீழ்ச்சியை கருத்தில் கொண்டு இரு வான் கதவுகள் 06 அங்குலமும் 4 வான்கதவுகள் 01 அங்குலமும் திறக்கப்பட்டன.
இதன் மூலம் 0.149 கனசென்ரிமீற்றர் நீர் வெளியேற்றப்படுகிறது என்று நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து மழை எதிர்வு கூறல் காணப்படுகின்ற நிலையில் தாழ் நிலப்பகுதியில் உள்ளவர்கள் அவதானமாக இருக்குமாறும் அந்தத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது
