கிளிநொச்சி, கல்மடு நகர் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை சிரமதானப் பணிகளில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் பாம்புக் கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
பாம்பு தீண்டிய இளைஞன் உடனடியாக அவர் தர்மபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் எனத் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

















