இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் சில கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. அதை நாம் கடந்து சென்று கொண்டிருக்கின்றோம். எமது கட்சி பலமாக இருக்கின்றது.’

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, சமகால அரசியல் நிலைமை குறித்து விரிவாகப் பேசும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகத்துக்கு எதிரான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. எனினும், எமது கட்சி சுமுமாக இயங் குகின்றது. வழக்கு விசாரணையின் இற தியில் நீதித்துறை என்ன சொன்னாலும் நாம் எல்லோரும் அதற்குக் கட்டுப்பட்டு இயங்குவோம்.

தமிழரசுக் கட்சிக்குள் சில கருத்து வேறு பாடுகள் இருக்கின்றன. அதை நாம் கடந்து சென்று கொண்டிருக்கின்றோம். கட்சியை உடையாமல் பார்ப்பது என்னுடைய தனிப்பட்ட முயற்சி. இதுவரை அதில் நான் வெற்றி கண்டிருக்கின்றேன் என்றுதான் நினைக்கின்றேன்.

வழக்கு முடிவடைகின்றபோது தீர்ப்பின் படி நாம் செயற்படுவோம். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. எமது கட்சி பல மாக இருக்கின்றது.’ – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here