Monday, February 2, 2026
HomeMain Newsபுத்தளம் முந்தல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலி!

புத்தளம் முந்தல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலி!

புத்தளம் – முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவண்டகுளம் பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

கார் ஒன்றும், வானும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் காரில் பயணித்த இரண்டு பெண்களும், ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் சிக்கி காயமடைந்த மேலும் 10 பேர் சிகிச்சைகளுக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாகன சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கத்தால் விபத்து நேர்ந்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular