இலங்கை தமிழ் அரசு கட்சியும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியும் இன்றைய தினம் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளன.
மாகாண சபைகள் தேர்தலை பிற்போடும் அரசாங்கத்தின் உத்தியை கையாண்டு – உரிய அழுத்தங்களை பிரயோகித்து அந்தத் தேர்தலை நடத்துவது தொடர்பிலேயே அவை பேசவுள்ளன என்று கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்பு இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமை பணிமனையில் நடைபெறவுள்ளது. இதில், தமிழ் அரசு கட்சியின் முக்கிய தலைவர்களும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்பர் என்றும் அறிய வருகிறது
