வடமராட்சி கிழக்கு, ஆழியவளை பகுதியில் நேற்று புதன்கிழமை பிற்பகல் 8:30 மணியளவில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

ஆழியவளை, செம்மண் வீதி அருகாமையில் உள்ள சிறிய பற்றைக் காட்டுப் பகுதிக்குள் கைக்குண்டு ஒன்றினை புலனாய்வு துறையினர் பாதுகாப்பான முறையில் அகற்றி மேலதிக விசாரணைகளுக்காக மருதங்கேணி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here