Wednesday, February 4, 2026
HomeMain Newsஇலங்கையின் சுதந்திரதினத்தில் யாழ். பல்கலையில் ஏற்றப்பட்டது கறுப்புக்கொடி

இலங்கையின் சுதந்திரதினத்தில் யாழ். பல்கலையில் ஏற்றப்பட்டது கறுப்புக்கொடி

இலங்கையின் 78வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது.

ஸ்ரீ லங்கா அரசின் 78ஆவது சுதந்திர தினம் தமிழ் மக்களின் கரிநாள் என்பதை அரசாங்கத்திற்கு கூறும் முகமாக இவ்வாறு கறுப்புக்கொடி ஏற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இலங்கையின் சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஷ்டிக்கும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கமும் இணைந்து வடக்கு, கிழக்கில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அந்தவகையில் வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் காலை 10.00 மணி முதல் இந்த போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular