இலங்கையின் 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலை அதிகாரி சீனிவாசன் இந்திரகுமார் தலைமையில் இன்று காலை இரண்டு சிறை கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர்.
கசிப்பு வழக்கு ஒன்றுக்காக தண்டப்பனம் செலுத்த முடியாமல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்கள் இருவரும் இன்றையதினம்(4) விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
