Tuesday, February 17, 2026
HomeMain Newsஇந்தியா பயணமானார் ஜனாதிபதி அநுர

இந்தியா பயணமானார் ஜனாதிபதி அநுர

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இந்தியாவில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ‘AI Impact’ சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு விசேட அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய, ஜனாதிபதி உள்ளிட்ட இலங்கைக் குழுவினர் இன்று பிற்பகல் 02.05 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL-195 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் புதுடெல்லி நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular