தமிழக மீனவர்கள் 22 பேர் கடற்படையினரால் கைது!

இலங்கை கடற்பரப்பினுள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பு அருகே இரண்டு படகுகளுடடன் 12 இராமேஸ்வரம் மீனவர்களும் மன்னார் கடற்பரப்பில்  இரண்டு படகுகளுடன்  10 இராமேஸ்வரம் மீனவர்களும் கடற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இவர்கள் இன்றைய தினம் ஊர்காவற்றுறை மற்றும் மன்னார் நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles