நெடுந்தீவுக்கு பயணிகளை ஏற்றி சென்ற படகில் கடற்படையினர் மதுபான ரின்களையும் ஏற்றி சென்றமை தொடர்பில் பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறிகாட்டுவானில் இருந்து இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை நெடுந்தீவு நோக்கி பயணித்த “நெடுந்தாரகை” படகில் கடற்படையினர் பெருமளவான மதுபான ரின்களை நெடுந்தீவுக்கு எடுத்து சென்றுள்ளனர்.
படகில் பெண்கள் , சிறுவர்கள் என பெருமளவானவர்கள் பயணித்த நிலையில் அந்த கடற்படையினரும் பெருமளவான மதுபான ரின்களை படகில் ஏற்றி சென்றுள்ளனர்.
பொது போக்குவரத்து சாதனத்தில் கடற்படையினர் அளவுக்கு அதிகமான மதுபான ரின்களை ஏற்றி சென்றமை தொடர்பில் பொலிஸாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது

















