இஸ்ரேல் பராளுமன்றத்தின் உயரிய விருது பெற்றார் பிரதமர் மோடி

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அந்நாட்டு சபாநாயகர் உயரிய விருதை அளித்து கௌரவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக இஸ்ரேல் நாட்டுக்குச் சென்றுள்ளார். சிறப்பு விமானம் மூலம் இஸ்ரேல் சென்ற அவருக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நேரில் சென்று உற்சாக வரவேற்பு அளித்தார்.

இதையடுத்து, பிரதமர் மோடி இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு சிறப்பு விருந்தினராகச் சென்று உரையாற்றினார். இதனால் அங்கு இந்திய தேசிய கொடியின் மூவர்ணங்களில் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அந்நாட்டு சபாநாயகர் உயரிய விருதை அளித்து கௌரவித்தார்.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன நாடுகளின் உயரிய விருதுகளைப் பெற்ற ஒரே உலக தலைவர் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles