“ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகத் தனது வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்தவர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் இரா. நல்லகண்ணுவின் புகழுடலுக்கு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் எம்.பி. நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
எளிமை, நேர்மை, சமூக நீதி, சமத்துவம் ஆகிய உயரிய மதிப்புகளின் உருவாக வாழ்ந்த அவர், தலைமுறைகள் கடந்தும் வழிகாட்டும் ஒளியாக நிலைத்திருப்பார்.
அவரது மறைவு அரசியல் உலகிற்கும், சமூக நீதிக்காகப் போராடும் மக்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் எனவும் சிறீதரன் எம்.பி. தெரிவித்துள்ளார்.















