தெஹ்ரானிலும் பின்னர் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பதிவான இஸ்ரேல் – அமெரிக்க வான்வழித் தாக்குதல்களில், ஏவுகணை ஒன்று சிறுமியர் பாடசாலை மீது விழுந்ததில் 24 மாணவிகள் உட்பட குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர். 60 பேர் காயமடைந்துள்ளனர்.
மினாப் நகரில் நிகழ்ந்த இந்த மரணங்களே, இந்த இராணுவ நடவடிக்கையில் ஈரானில் உறுதிப்படுத்தப்பட்ட முதல் உயிரிழப்புகளாகும் என சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் புரட்சிகர இராணுவத்தின் தளம் ஒன்று மினாப் நகரில் அமைந்துள்ளது.
ஈரான் மீதான இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானிய மக்களை நோக்கி, உங்கள் விதியை நீங்களே தீர்மானியுங்கள் என்றும், 1979 ஆம் ஆண்டு முதல் நாட்டை ஆட்சி செய்து வரும் இஸ்லாமியத் தலைமைக்கு எதிராகக் கிளர்ந்தெழுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அலுவலகங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆரம்பக்கட்டத் தாக்குதல்களில் சில நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

















