வவுனியா புளியங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் என புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவமானது நேற்று சனிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றிருந்தது.
முல்லைத்தீவில் இருந்து குருணாகல் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் முன்னே சென்ற துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி மற்றும் துவிச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிளின் பயணித்த மற்றையவர் உயிரிழந்தார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா, புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

