ஐந்து ஈரானிய பெண் கால்பந்து வீராங்கனைகளுக்கு அவுஸ்ரேலியா அடைக்கலம்

மகளிர் ஆசியக் கிண்ண முதல் போட்டியின் போது அரசுக்கு எதிராக ஈரானிய தேசிய கீதத்தைப் பாட மறுத்த ஈரானிய மகளிர் கால்பந்து அணிக்கு, அவுஸ்ரேலியாவில் புகலிடம் கோர மனிதாபிமான விசாக்கள் வழங்கப்பட்டதாக அவுஸ்ரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இன்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தினார்.

ஈரானிய பெண்கள் கால்பந்து அணி தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடமிருந்து தனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் அவர் கூறினார்.

தென் கொரியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்பு ஈரான் தேசிய கீதம் இசைக்கப்படும்போது வீரர்கள் மௌனமாக நிற்க முடிவு செய்தது “அவமதிப்பின் உச்சம்” என்று ஈரானின் IRIB அரச ஒளிபரப்பு வர்ணனையாளரால் வர்ணிக்கப்பட்டது.

ஐந்து பெண் வீராங்கனைகள், ஈரானுக்குத் திரும்பினால் தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தில், மகளிர் அணி தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து தப்பி அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரினர்.

இந்நிலையில் புகலிடம் கோரிய ஐந்து பெண் வீராங்கனைகளுக்கு மட்டுமல்ல, முழு மகளிர் கால்பந்து அணிக்கும் மனிதாபிமான விசாக்கள் வழங்கப்பட்டதாகவும், ஆனால் அந்த விசாக்களைப் பெறுவதா இல்லையா என்பது குறித்த இறுதி முடிவு வீரர்களைப் பொறுத்தது என்றும் அவுஸ்ரேலிய பிரதமர் அறிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் சிறப்பு கவனம் செலுத்தி வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது X தளத்தில் , அவுஸ்ரேலிய அரசாங்கம் ஈரானிய பெண் கால்பந்து வீராங்கனைகளுக்கு அடைக்கலம் வழங்காவிட்டால், அமெரிக்கா அவர்களுக்கு அடைக்கலம் வழங்கத் தயாராக இருப்பதாகப் பதிவிட்டிருந்தார்.

பின்னர் சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, டிரம்ப் மீண்டும் அவுஸ்ரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸுடன் பேசியதாகவும், “ஐந்து பேர் ஏற்கனவே கவனித்தில் கொள்ளப்பட்டதாகவும், மீதமுள்ளவர்கள் தங்கள் பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.

இருப்பினும், சிலர் தங்கள் குடும்பங்களின் பாதுகாப்பு குறித்து கவலைப்படுவதால், அவர்கள் திரும்பிச் செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள், அவர்கள் திரும்பி வரவில்லை என்றால் அந்தக் குடும்ப உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல்கள் உட்பட. எப்படியிருந்தாலும், இந்த நுட்பமான சூழ்நிலையில் பிரதமர் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறார்.
அவுஸ்ரேலியாவை கடவுள் ஆசீர்வதிப்பாராக! ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் X இல் பதிவிட்டுள்ளார்.

ஐந்து பெண்கள் அவுஸ்திரேலியாவில் தங்கவும், பாதுகாப்பாகவும் இருக்க முடியும் என அவுஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles