யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
கொழும்புத்துறையை அண்டிய பகுதியில் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் மணியந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த பிரட்லீ (வயது 24) அவரது சகோதரியான டிலக்ஸி (வயது 19) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
சகோதரர்களான இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது, பவுசருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
