சினோபெக், லங்கா ஐ.ஓ.சி. நிறுவனங்களும் எரிபொருள் விலைகளை அதிகரித்தன

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை அதிகரித்ததைத் தொடர்ந்து, சினோபெக் (Sinopec) நிறுவனமும் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் தமது எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளன.

இதன்படி, சினோபெக் நிறுவனத்தின் ஒக்டேன் 95 பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 122 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 487 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலையை 219 ரூபாவினால் அதிகரிக்க அந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதன் புதிய விலை 572 ரூபாவாகும்.

இதேவேளை, லங்கா ஐ.ஓ.சி (LIOC) நிறுவனமும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைகளுக்கு நிகராகத் தனது எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.

நேற்று (21) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டன. இதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 79 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 382 ரூபாவாகவும், லங்கா சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 90 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 443 ரூபாவாகவும் மாற்றமடைந்துள்ளது.

அத்துடன், ஒக்டேன் 95 வகை பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 90 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 455 ரூபாவாகவும், ஒக்டேன் 92 பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 81 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 398 ரூபாவாகவும் காணப்படுகிறது. மேலும், லங்கா மண்ணெண்ணெய் விலையை 60 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 255 ரூபா என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles