வயது 79
யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், இல100 செல்வபுரம், வவுனிக்குளத்தை வசிப்பிடமாகவும், லண்டன் Coventry ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கண்மணி சொக்கலிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று ஆண்டுகள் பன்னிரண்டு கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அம்மாவின் அன்பு முகம்!
உங்கள் புன்சிரிப்பும் பாசம் நிறைந்த
அரவணைப்பும் எங்களை ஒவ்வொரு
பொழுதும் ஏங்க வைக்கின்றது அம்மா
காலங்கள் தான் போனதம்மா
உனைப் பிரிந்த வேதனை
இன்னமும் குறையவில்லையம்மா
உன் உடல் தான் மறைந்ததம்மா
கண்மூடித்திறக்கும் முன் எம்மை விட்டுப் பிரிந்து
பன்னிரண்டு ஆண்டுகள் ஆனதம்மா
உங்கள் பிரிவுதன்னை எம்மனங்கள்
ஏற்க மறக்குதம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்: குடும்பத்தினர்
