யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் Harrow ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கமலினி சாந்தகுமார் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
யாரிடம் சொல்லி அழுவேன்
யாரிடம் அவள்கதை கூறுவேன்
யாரிடம் அவள்முகம் காணுவேன்
யாரிடம் அவள் தரும் அன்பைத் தேடுவேன்
முடியுமா?…
தேவியின் அன்புக்கும் கனிவுக்கும் முன்னால்
எவராலும் ஈடுசெய்ய
முடியுமா?
தனிமையிலிருந்து தத்தளிக்கும்
தனி மரமாகிவிட்டேன்- நீ
தள்ளிச்சென்றதால்- என் கனகமே…
தாங்கமுடியவில்லை
தவிக்கின்றேன்..
தள்ளாடுகின்றேன்..தயங்குகின்றேன்.. என் தவமணியே…
ஆயிரம் அறிவுரை சொல்லி
அகிலத்தைக் காணவைத்தீர்
சோதனை பல தாண்டி- எம்மை
சொர்க்கத்தின் கரைசேர்த்தீர்
எம் அன்னையே….
உன்னை விளக்காக்கி
தரணியில் தகுதி கொடுத்தாயே என் தாயே
தங்கங்கள் பல இருந்தும் தாங்க முடியவில்லை
தவிக்கின்றோம் தாயின் அன்புக்காய்…
ஆயிரம் உறவுகளிருந்தென்ன ஆகிடுமா…
உம் அன்புக்கு ஆகவில்லை அலைகின்றோம்- எம்
அன்னையின் அன்புக்காய்…எம் தாயே
