ஹோர்முஸ் நீரிணையில் கட்டணம் அறவிட அமெரிக்கா அனுமதிக்காது

“ஹோர்முஸ் ஜலசந்தி ஒரு சர்வதேச நீர்வழிப் பாதை. எனவே, அதன் வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு ஈரான் கட்டணம் விதிக்க அமெரிக்கா அனுமதிக்காது” என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாகக் கூறினார்.

ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “ஈரானின் ஒத்துழைப்பு இருந்தாலும், இல்லாவிட்டாலும் அமெரிக்கா ஹார்முஸ் ஜலசந்தியை மிக விரைவில் திறக்கும். அது எளிதாக இருக்காது என்றாலும், நாங்கள் அதை மிக விரைவில் திறப்போம். ஹார்முஸ் ஜலசந்திக்கு கட்டணம் விதிக்க நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை. அது ஒரு சர்வதேச நீர்வழிப் பாதை. அவர்கள் கட்டணம் விதிக்க நினைத்தால், நாங்கள் அதை நடக்க விடமாட்டோம்” என்று கூறினார்.

முன்னதாக ட்ரம்ப் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘சர்வதேச நீர்வழிகளைப் பயன்படுத்தி உலகை குறுகிய காலத்திற்கு மிரட்டிப் பணம் பறிப்பதைத் தவிர, தங்களிடம் வேறு எந்த ஆயுதமும் இல்லை என்பதை ஈரானியர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மட்டுமே அவர்கள் இன்று உயிருடன் இருக்கிறார்கள்.

சண்டையிடுவதை விட, போலி செய்தி ஊடகங்களையும், விளம்பரப்படும் மக்கள் தொடர்புகளையும் கையாள்வதில் ஈரானியர்கள் சிறந்தவர்கள்’ என்று அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, ஈரானின் நாடாளுமன்ற தேசியப் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் இப்ராஹிம் அஜிஜி, நாடாளுமன்ற முன்மொழிவின்படி, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்கள் ஈரானின் தேசிய நாணயமான ரியாலில் கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும் என்று கூறியிருந்தார்.

முன்னதாக அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்​துக்கு இடையே கடந்த பிப்​.28-ம் தேதி முதல் போர் நடை​பெற்று வந்த நிலை​யில், கடந்த 8-ம் தேதி தற்​காலிக போர்​நிறுத்​தம் அமலுக்கு வந்​தது. இதன் தொடர்ச்​சி​யாக, பாகிஸ்​தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்​கா, ஈரான் பிர​தி​நி​தி​கள் பங்கேற்​கும் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வருவது கவனிக்கத்தக்கது.

லெப​னான் மீதான தாக்​குதல்​களை குறைத்​துக் கொள்ளுமாறு இஸ்​ரேல் பிரதமர் பெஞ்​சமின் நெதன்யாகுவிடம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனிப்​பட்ட முறை​யில் வலி​யுறுத்​தி​ய​தாக தகவல்​கள் வெளி​யாகின. இதையடுத்​து, லெப​னான் மீதான தாக்​குதலை இஸ்​ரேல் தற்​காலிக​மாக நிறுத்​தி​யுள்​ள​தாக கூறப்படு​கிறது.

லெப​னான் தலைநகர் பெய்​ரூட்​டில் நேற்று வான்​வழித் தாக்​குதல்​கள் ஏதும் நடத்​தப்​பட​வில்லை என்று கள நிலவரங்​கள் கூறுகின்​றன. இதற்​கிடையே, லெப​னானுடன் நேரடி பேச்​சு​வார்த்தை நடத்த இஸ்​ரேல் ஒப்​புக்​கொண்​டது. லெப​னான் மீதான தாக்​குதல் நிறுத்​தப்​பட்​ட​தால் இந்த பேச்​சு​வார்த்​தை​யில் பங்கேற்க ஈரான் பிர​தி​நி​தி​களும் சம்மதம் தெரி​வித்​துள்​ள​தாக கூறப்​படு​கிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles