Sangathy
News

டெங்கு, இரத்த பரிசோதனைகளுக்கு அதிகக் கட்டணம் அறவிட்ட தனியார் வைத்தியசாலைகளுக்கு 55 இலட்சம் ரூபா அபராதம்

Colombo (News 1st) டெங்கு பரிசோதனை மற்றும் முழுமையான இரத்த பரிசோதனைக்கு கட்டுப்பாட்டு கட்டணத்தை விட அதிகமாக அறிவிட்ட 08 தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வுக்கூடங்களுக்கு 55 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

புதுக்கடை,  நுகேகொடை நீதவான் நீதிமன்றங்களில் நுகர்வோர் விவகார அதிகார சபை தாக்கல் செய்த வழக்குகளிலேயே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலுக்கான துரித இரத்தப் பரிசோதனைக்குரிய உச்சபட்ச கட்டணம் 1200 ரூபாவாகும். எனினும், இதற்காக 3000 ரூபா வரை கட்டணம் அறிவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

முழுமையான இரத்த பரிசோதனைக்கான உச்சபட்ச கட்டணமாக 400 ரூபா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு 1000 ரூபா வரை அறிவிடப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு விலையை விட, அதிகக் கட்டணம் அறிவிட்டமை தொடர்பில் மேலும் 10 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

2600 கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைக்க தீர்மானம்

John David

மின் கட்டணத்தை குறைப்பதற்கான பிரேரணை முன்வைக்கப்படவில்லை – பொது பயன்பாடுகள் ஆணைக்குழு

Lincoln

IMF-இன் 2ஆவது கடன் தவணை தொடர்பான அறிவித்தல்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy