Sangathy
News

பாடசாலை மாணவர்களுக்கு போதை வில்லைகள் விற்பனை: முல்லைத்தீவை சேர்ந்த இருவர் பேலியகொடையில் கைது

Colombo (News 1st) பாடசாலை மாணவர்களுக்கு போதை வில்லைகளை விற்பனை செய்யும் இருவர் பேலியகொடையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேலியகொடை – துட்டுகெமுனு மாவத்தையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சந்தேகநபர்கள் போதை வில்லைகளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

பேலியகொடையில் உள்ள பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து, விற்பனை செய்வதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 400 பேதை வில்லைகள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

முல்லைத்தீவை சேர்ந்த 28 வயதான இரண்டு இளைஞர்களே போதைவில்லைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள், மேலதிக விசாரணைகளுக்காக பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 

Related posts

பஸ்,லொறி மற்றும் ட்ரக் வண்டிகளுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த தீர்மானம்

Lincoln

நாளை (01) முதல் கடவுச்சீட்டுக்கான கட்டணம் அதிகரிப்பு

John David

குழந்தைப்பேற்றுக்காக கை மருந்தை உட்கொண்ட யுவதி மரணம்; பொலிஸார் விசாரணை

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy