Sangathy
News

ஹிக்கடுவை பொலிஸ் நிலையத்தில் அமைதியற்ற முறையில் நடந்துகொண்ட 19 பேர் கைது

Colombo (News 1st) ஹிக்கடுவை பொலிஸ் நிலையத்தில் அமைதியற்ற முறையில் நடந்துகொண்ட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்வதற்காக அழைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், அவர்கள் அமைதியற்ற முறையில் நடந்துகொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிகம கடற்கரையில் படகொன்று தொடர்பில் இரு தரப்பினருக்கிடையே அண்மையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதல் தொடர்பில் ஹிக்கடுவை பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை விசாரணை செய்வதற்காக நேற்றைய தினம் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு இரு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் அமைதியற்ற முறையில் செயற்பட்டமையின் காரணமாக, அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வருகை தந்த முச்சக்கர வண்டியில் இருந்து வாளும் கத்தியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

24 முதல் 50 வயதிற்கு இடைப்பட்ட ரத்கம மற்றும் தொடன்துவ பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்த இந்திய பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: K.S. அழகிரி வலியுறுத்தல்

Lincoln

Sniper arrested for involvement in plot to spring free Harak Kata from CID Hqrs

John David

வரிப்பணத்தில் எப்படி இவர்களால் உல்லாசமாக இருக்க முடிகிறது? – மஹிந்த தரப்புக்கு சஜித் சாட்டை!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy