Colombo (News 1st) ஆளுநரின் ஒருங்கிணைப்பாளராக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை நியமிப்பது தொடர்பிலான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆளுநரின் ஒருங்கிணைப்பாளராக அதிகாரிகள் நியமிக்கப்படுவது அவசியமற்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் நடைமுறைப்படுத்தவே மாகாண சபை ஆணையாளர்கள், உள்ளூராட்சிமன்றங்களின் செயலாளர்கள் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனை குறிப்பிட்டார்.
You must be logged in to post a comment.