Sangathy
News

கண்டி – மஹியங்கனை வீதியில் இடம்பெற்ற விபத்தில் 6 மாத குழந்தை பலி

Colombo (News 1st) கண்டி – மஹியங்கனை வீதியின் குருலுபொத்த பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதுடன், 20 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் பஸ் ஒன்று சுக்கான் செயற்படாததன் காரணமாக, மண்மேட்டுடன் மோதி குடைசாய்ந்து விபத்திற்குள்ளானது.

விபத்தில் 7 ஆண்கள், 10 பெண்கள் மற்றும் மூன்று சிறுவர்கள் காயமடைந்து, மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது, 6 மாத குழந்தை உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

பிபில பிரதேசத்தில் இருந்து யாத்திரை சென்று திரும்பியவர்களே இந்த விபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

Related posts

மின் கட்டண திருத்தத்திற்கு VAT-இனால் தாக்கம் ஏற்படாது – மின்சக்தி அமைச்சர்

John David

Good King Ranil and his options: Keep running or end the Executive Presidency

Lincoln

Customs revenue exceeds Rs. 109 billion in October

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy