Sangathy
News

களுத்துறையின் சில பகுதிகளில் 12 மணி நேர நீர்வெட்டு

Colombo (News 1st) களுத்துறையை அண்மித்த சில பகுதிகளில் இன்று(05) 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

வாதுவை, வஸ்கடுவ, பொத்துபிட்டிய, களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு, கட்டுகுருந்த, நாகொட, பெந்தோட்டை, பயாகல, பொம்முவல, மக்கொன, தர்காநகர், அளுத்கம, பிலிமிநாவத்த, களுவாமோதர, மொரகல்ல ஆகிய பகுதிகளிலேயே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்று(05) காலை 9.30 முதல் இரவு 9.30 வரை குறித்த பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அளுத்தகம, மத்துகம, அகலவத்தை ஒன்றிணைந்த நீர் விநியோக செயற்றிட்டத்தின் அத்தியாவசிய மேம்படுத்தல் நடவடிக்கைகளுக்காக குறித்த பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Related posts

பெலியத்தயில் ஐவர் சுட்டுக்கொலை: பத்தேகமயில் சந்தேகநபர் கைது

John David

Suspect dies in police shooting

Lincoln

உள்ளூராட்சி மன்றங்களுக்கு இணைத்துக்கொள்ளப்பட்டவர்களுக்கு விரைவில் நியமனம் – ஜானக வக்கும்புர

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy