X-Press Pearl பேச்சுவார்த்தைக்கான விசேட குழு நாளை(17) சிங்கப்பூருக்கு பயணம்

Colombo (News 1st) X-Press Pearl கப்பல் விபத்தினால் ஏற்பட்ட சேதங்களுக்கான இணக்கப்பாடு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விசேட குழு நாளை(17) சிங்கப்பூருக்கு பயணமாகவுள்ளது.

சட்ட மா அதிபர் சஞ்சய் ராஜரத்னம் குழுவிற்கு தலைமை தாங்கவுள்ளார்.

குறித்த பேச்சுவார்த்தையை எதிர்வரும் செவ்வாய்(18) மற்றும் புதன்கிழமைகளில்(19) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கப்பல் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் சட்டத்தரணிகள் மற்றும் அதிகாரிகள் குறித்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles