இறப்பு – 13 SEP 2018
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Aubervilliers, France
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aubervilliers ஐ வதிவிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் ஜனகன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஐந்து கடந்தாலும்
எமை ஆளாக்கிய குலவிளக்கே
உமது நினைவுகள் ஆறாது
என்றுமே எம் மனதில்
காலங்கள் போகலாம், காயங்கள் மாறலாம்,
நெஞ்சினில் உள்ள உங்கள் நினைவுகள்
என்றும் நம்மை விட்டு போகாது
உங்கள் நினைவுகளை காலமெல்லாம்
நாங்கள் சுமந்து நிற்போம்
இறைவன் ஏன் எங்களிடமிருந்து
உங்களை பறித்துக்கொண்டார்
ஏங்கித் தவிக்கின்றோம் !
எம் பார்வையிலிருந்து மறைந்தாலும்
எமது இதயத்திலுருந்து
ஒரு போதும் மறையப்
போவது இல்லை..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
You must be logged in to post a comment.