Sangathy
News

சீரற்ற காலநிலையால் கிளிநொச்சியில் 394 குடும்பங்கள் பாதிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற வானிலையால் 394 குடும்பங்களை சேர்ந்த 1234 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் ” சீரற்ற வானிலையால் கிளிநொச்சியில் 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

குறிப்பாக கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகளே சீரற்ற வானிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக கரைச்சி பிரதேச செயலாள் பிரிவில், 54 குடும்பங்களை சேர்ந்த 186 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கண்டாவளை பிரதேச செயலாள் பிரிவில், 340 குடும்பங்களை சேர்ந்த 1048 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

Duke of Edinburgh, HRH Prince Philip, Passed Away at the age of 100

Lincoln

கந்தகாடு புனர்வாழ்வு நிலைய நிர்வாகத்தை மாற்றுவது குறித்து பரிசீலனை – நீதி அமைச்சர்

John David

Lawyers visiting clients: SC orders IGP to put in place regulatory framework

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy