Sangathy
News

இந்த ஆண்டு இதுவரை வீதி விபத்தால் 2 ஆயிரம் பேர் மரணம்!

2023 வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் நாட்டில் பதிவாகியுள்ளதாகவும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் உயிரிழந்துள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்துக்களில் 2,163 பேர் உயிரிழந்துள்ளதுடன், 5,206 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை டிசம்பர் மாதம் மற்றும் ஜனவரி முதல் வாரங்களில் அதிகளவு வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த விபத்துகள் இடம்பெறுவதற்கு மதுபோதையில் வாகனம் செலுத்துவதே பிரதான காரணம் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளினாலேயே அதிக விபத்துக்கள் ஏற்படுவதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சட்டவிரோத துப்பாக்கிகள், கைக்குண்டுகளை கைப்பற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கான அன்பளிப்பு தொகையை அதிகரிக்க

Lincoln

Prof. Mohan Munasinghe advises the government on sustainable urban development in Portugal

Lincoln

State FM assures there won’t be shortage of milk powder

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy