Colombo (News 1st) தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன்களை உற்பத்தி செய்த 180 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட சுமார் 7146 சோதனைகளையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2018 ஆம் ஆண்டிலிருந்து 37,181 நிறுவனங்கள் சோதனை செய்யப்பட்டு, 2357 நிறுவனங்களின் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கழிவு முகாமைத்துவ பிரிவின் பொறுப்பதிகாரி அஜித் வீரசுந்தர தெரிவித்தார்.
You must be logged in to post a comment.