Colombo (News 1st) Shakthi CROWN ரியாலிட்டி இசை நிகழ்ச்சியின் குரல் தேர்வு இன்று(15) மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் காலை 9 மணி முதல் 4 மணி வரை குரல் தேர்வு நடைபெறவுள்ளது.
15 வயதுக்கு மேற்பட்ட பாடும் திறமையுடைய அனைவருக்கும் இதில் கலந்துகொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையர்களின் குரலை சர்வதேசத்திற்கு எடுத்துச்செல்லும் நாட்டின் தனித்துவமான Shakthi CROWN ரியாலிட்டி இசை நிகழ்ச்சியின் முதற்கட்ட குரல் தேர்வு திருகோணமலையில் நேற்று(14) நடைபெற்றது
திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற குரல் தேர்வில் ஏராளமானோர் கலந்துகொண்டிருந்தனர்.
You must be logged in to post a comment.