Sangathy
News

பஸ் விபத்தில் 36 பேர் காயம்

Colombo (News 1st) மொனராகலை – கொடயான பகுதியில் இலங்கை போக்குவரதது சபைக்கு சொந்தமான பஸ் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 36 பேர் காயமடைந்துள்ளனர்.

புத்தமவில் இருந்து மொனராகலை நோக்கி பயணித்த பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சியாம்பலாண்டுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுள் 24 பாடசாலை மாணவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இதேவேளை, தெஹிவளை மேம்பாலத்திற்கு அருகில் இன்று(29) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரண்டு தனியார் பஸ்கள் முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் கல்கிசை பகுதியைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியொருவர் உயிரிழந்துள்ளார்.

Related posts

Security Council to meet PBC today to discuss implications of coronavirus in conflict-affected countries

Lincoln

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது!

Lincoln

வரலாற்றில் முதல் முறையாக ஜனாதிபதியின் பதில் செயலாளராக பெண் ஒருவர் நியமனம்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy