Colombo (News 1st) தென் மாகாணத்தில் இன்று (01) துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் கல்விக்காக சிறந்த சேவையாற்றிய முன்னாள் அமைச்சர் ரொனி டி மெல் காலமானதையிட்டு துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாகாண ஆளுநரின் அறிவிப்பிற்கு அமைவாக துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
மாகாணத்தின் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் ரொனி டி மெலின் இறுதிக்கிரியைகள் நேற்று பிற்பகல் ருகுணு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
You must be logged in to post a comment.