உலக நீர் மன்றத்தின் உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்க ஜனாதிபதி இந்தோனேசியா பயணம்..!

இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் (Joko Widodo) உத்தியோகபூர்வ அழைப்பின்பேரில், மே 18 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இந்தோனேசியாவில் நடைபெறும் 10 ஆவது உலக நீர் மன்றத்தின் உயர்மட்ட கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொள்கிறார்.

மே 20 ஆம் திகதி நடைபெறும் உயர்மட்டக் கூட்டத்தில் “கூட்டுச் செழுமைக்கான நீர்” எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி உரையாற்ற உள்ளதோடு இந்தோனேசிய ஜனாதிபதி உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளும் நடைபெற உள்ளன.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles