பள்ளிக்கு சென்ற 3 வயது குழந்தை – சாக்கடைக்குள் கண்டெடுத்த பெற்றோர் : அடுத்த நொடி நடந்த பயங்கரம்..!

பள்ளிக்கு சென்ற 3 வயது குழந்தை, பள்ளி வகுப்பறைக்கு அருகே இருந்த சாக்கடையில் சடலமாக இருந்த சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்களும், ஊர் மக்களும் பள்ளிக்கு தீ வைத்து அடித்து நொறுக்கினர்.

பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ராம்ஜிசாக் பகுதியில் டைனி டாட் அகாடமி என்ற பெயரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. 1000-க்கும் மேற்பட்டோர் இந்த பள்ளியில் படித்து வருகிறார்கள். இதனிடையே, அந்தப் பள்ளியில் எல்கேஜி வகுப்பில் டிக்குன் என்ற 3 வயது சிறுவன் படித்து வந்தான். தினமும் ஆட்டோவில் பள்ளிக்கு செல்லும் அந்த சிறுவனை, மாலையில் பள்ளி விட்டதும் அவனது தந்தை வந்து அழைத்து செல்வது வழக்கம்.

இதனிடையே, நேற்று காலை (வியாழக்கிழமை) பள்ளிக்கு சென்ற சிறுவனை, மாலையில் அழைத்து செல்ல அவனது தந்தை வந்திருக்கிறார். அப்போது சிறுவன் வரவில்லை. இதையடுத்து, வகுப்பு ஆசிரியையிடம் இதுகுறித்து கேட்ட போது அவன் ஏற்கனவே சென்றுவிட்டதாக கூறியுள்ளார். இதனால் பயந்து போன சிறுவனின் தந்தை, போலீஸுக்கு தகவல் தெரிவிக்கவே, போலீஸாரும் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால், சிறுவன் காணவில்லை.

இதையடுத்து, சிறுவனின் உறவினர்கள் இன்று காலை பள்ளிக்கு சென்று அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது சிறுவன் பள்ளிக்குள் நுழைவது பதிவாகி இருந்தது. ஆனால், சிறுவன் பள்ளியில் இருந்து வெளியே வரவில்லை. இதையடுத்து, சிறுவனின் உறவினர்கள், பள்ளி நிர்வாக்ததினரை மீறி பள்ளிக்குள் சென்று சிறுவனை தேடினர். அப்போது எல்கேஜி வகுப்புக்கு அருகே இருக்கும் காலி இடத்தில் உள்ள சாக்கடையில் சிறுவனிடம் சடலம் இருந்தது தெரியவந்தது. அதற்கு மேலே சிமெண்ட் பலகையை சிலர் போட்டிருந்தனர்.

இதனால் கடும் ஆத்திரமடைந்த சிறுவனின் பெற்றோர்களும், உறவினர்களும் பள்ளியை அடித்து நொறுக்க தொடங்கினர். மேலும், தகவலறிந்த அந்தப் பகுதி மக்களும் பள்ளிக்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். பின்னர் தீ வைத்தனர். இதனைத் தொடர்ந்து, பள்ளிக்கு வெளியே சிறுவனின் பெற்றோர்களுடன் சேர்ந்து அப்பகுதி மக்கள் நூற்றுக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், கொலையாளியை பள்ளி நிர்வாகம் மறைப்பதாக கூறியும் அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,

“சிறுவனின் உடல் மறைக்கப்பட்டிருக்கிறது. இதில் இருந்தே பள்ளிக்குள் இருக்கும் யாரோ தான் சிறுவனை கொலை செய்திருப்பது தெரியவந்திருக்கிறது. சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. அதன் முடிவுகள் வெளிவந்த பிறகுதான் பாலியல் ரீதியில் ஏதேனும் குற்றம் நடந்திருக்கிறதா என்பது தெரியவரும். பள்ளி நிர்வாகத்தினர் அனைவரும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்” என அவர் கூறினார்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles