Monday, September 23, 2024
Homeமேற்குவங்க மாநிலத்தில் இரு ரயில்கள் மோதி விபத்து : ஐவர் பலி..!

மேற்குவங்க மாநிலத்தில் இரு ரயில்கள் மோதி விபத்து : ஐவர் பலி..!

இந்தியாவின் மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் ரங்காபாணி ரயில் நிலையத்தை நோக்கி கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்த போது சமிக்ஞை கிடைக்காததால், ரயில் நிறுத்தப்பட்டது.

அந்த நேரத்தில், கஞ்சன் ஜங்கா ரயில் நின்று கொண்டிருந்த அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த மற்றொரு வந்த சரக்கு ரயில். கண்ணிமைக்கும் நேரத்தில்முன்னாள் நின்றிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் பின்புறத்தில் மோதியது.

இதில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் 3 ரயில் பெட்டிகள் பலத்த சேதமடைந்தன. இந்த பெட்டிகளில் இருந்த 5 பேர் உயிரிழந்துள்ளதோடு 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக தெரிவித்துள்ள மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், ரயில்வே மூத்த அதிகாரிகள் விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments