Monday, September 23, 2024
Homeகாதலியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இளைஞன் தற்கொலை..!

காதலியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இளைஞன் தற்கொலை..!

கொழும்பு, புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள பழக்கடை கடை ஒன்றில் பணிபுரிந்து வந்த 19 வயதுடைய இளைஞன், காதலியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக நேற்று (24) தற்கொலை செய்துள்ளார்.

நிந்தவூரைச் சேர்ந்த இளைஞன், புறக்கோட்டையில் பழக்கடையொன்றில் வேலை செய்து கொண்டிருந்த போது, தொழுகையில் ஈடுபடுவதாகக் கூறி, குறித்த கடை அமைந்துள்ள கட்டடத்தின் மூன்றாவது மாடிக்கு சென்று தனது காதலிக்கு வீடியோ அழைப்பில் தொடர்பு கொண்டு தற்கொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த இளைஞனின் கையடக்கத் தொலைபேசியை சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments